sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு

/

மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு

மும்பையில் மெட்ரோ திட்ட தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி; விசாரணைக்கு உத்தரவு


ADDED : பிப் 14, 2026 03:58 PM

Google News

ADDED : பிப் 14, 2026 03:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மும்பையில் மெட்ரோ கட்டுமான பணியின் போது, தூண் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. முலண்ட் எல்பிஎஸ் சாலையில் இந்த திட்டத்திற்காக அதி உயரம் கொண்ட சிமெண்ட் தூண்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் அவ்வாறு கட்டப்பட்டு இருந்த சிமெண்ட் தூணின் ஒரு பகுதியானது திடீரென இடிந்து விழுந்தது. இதில் அருகில் இருந்த ஆட்டோ ரிக்ஷா ஒன்று நசுங்கியது. அதனுள் இருந்த ஒருவர் இடிபாடுகளில் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அங்குள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மீட்பு படையினர், உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். மெட்ரோ அதிகாரிகளும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பலியானவர் பெயர் ராம்தான் யாதவ் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உத்தரவிட்டு உள்ளார். மேலும் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவ அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us