sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 

/

ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 

ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 

ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா திடீர் மரணம் 


ADDED : செப் 19, 2024 11:01 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா, மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கர்நாடக ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா, 84. வயோதிகம், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், பெங்களூரு ரூரல் ஜோதிபுரா கிராமத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

நேற்று காலை 10:00 மணியளவில், திடீர் மாரடைப்பால் அவர் மரணம் அடைந்தார். கெம்பண்ணா மறைவுக்கு முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து உள்ளார்.

'எக்ஸ்' வலைதள பக்கத்தில், 'ஒப்பந்ததாரர் சங்க தலைவர் கெம்பண்ணா மறைவு வருத்தம் அளிக்கிறது. பா.ஜ., ஆட்சியில் நாடு முழுதும், தலைப்பு செய்தியான 40 சதவீத கமிஷன் மோசடியை வெளிக்கொண்டு வந்து, ஒப்பந்த பணிகளில் ஊழலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தார்.

'எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாத குரலை, நாடு இழந்து உள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கு வேதனையை தாங்கும் சக்தியை கடவுள் அளிக்கவும் பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டு உள்ளார்.

கடந்த பா.ஜ., ஆட்சியில் அமைச்சர்கள், ஒப்பந்ததாரர்களிடம் 40 சதவீத கமிஷன் கேட்பதாக, கெம்பண்ணா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். கெம்பண்ணா பயன்படுத்திய 40 சதவீத கமிஷன் என்ற வார்த்தையை வைத்தே, பா.ஜ.,வை, எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் விமர்சித்தது.

ஆட்சி மாறிய நிலையில், காங்கிரஸ் ஆட்சியிலும் 40 சதவீத கமிஷன் கேட்கப்படுவதாக, கெம்பண்ணா குற்றச்சாட்டு கூறி இருந்தார்.

'ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவை தொகை விடுவிக்கவில்லை என்றால், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்' என்றும் எச்சரித்து இருந்தார்.






      Dinamalar
      Follow us