ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்
ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் மத்திய அமைச்சர்
ADDED : மே 08, 2024 06:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: ராஜபுத்திரர்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா மன்னிப்பு கோரினார்.
லோக்சபா தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதி பா.ஜ., வேட்பாளரும், மத்திய அமைச்சருமான புருஷோத்தம் ரூபாலா, சமீபத்தில் பேசுகையில், ராஜபுத்திர சமூகத்தினர் , ஆங்கிலேயர்களுக்கு பெண் கொடுக்கும் அளவிற்கு அவர்களுடன் நெருக்கம் காட்டினர் என பேசினார். இவரது பேச்சுக்கு குஜராத்தில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவரது பேச்சுக்கு ராஜஸ்தான், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் ராஜபுத்திர சமூகத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாம் பேசிய கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்து மன்னிப்பு கோரினார்.

