sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

/

நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

13


UPDATED : ஏப் 20, 2024 01:47 PM

ADDED : ஏப் 20, 2024 01:29 PM

Google News

UPDATED : ஏப் 20, 2024 01:47 PM ADDED : ஏப் 20, 2024 01:29 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛‛ ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி ? என பிரதமர் மோடி பாடம் நடத்தி வருகிறார்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு ‛முழு ஊழல் அறிவியல்' என்ற பாடத்தின் கீழ், ‛நன்கொடை வியாபாரம்' உட்பட ஒவ்வொரு அத்யாயத்தையும் அவரே விரிவாக கற்பிக்கிறார்.



அதில், ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?

நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி?

ஊழவ்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங்மெஷின் எப்படி செயல்படுகிறது?

விசாரணை அமைப்புகளை பறிக்கும் முகவர்களாக்குவதன் மூலம் ‛ பெயில் மற்றும் சிறை' விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்து பாடம் நடத்தப்படுகிறது.

ஊழல்வாதிகளின் கூடாரமாகி உள்ள பா.ஜ., அதன் தலைவர்களுக்கு இந்த பாடங்களை கட்டாயமாக்கி இருக்கிறது. அதற்கான கட்டணத்தை நாடு செலுத்துகிறது. ‛ இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும், இந்த பள்ளியை மூடுவதுடன், இந்த பாடங்களை ரத்து செய்யும்.

150 இடங்களை தாண்டாது

பீஹாரின் பகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மத்தியில் ‛ இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். அனைவருக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி அமைப்பை மாற்றுவோம். ஒரே வரி குறைந்த வரி இருக்கும். அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிப்போம்.
அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், பா.ஜ.,150 இடங்களை தாண்டாது என நான் தெளிவாக கூறுகிறேன். அதற்கு மேல் ஒரு இடத்தையும் அக்கட்சி தாண்டாது. இவ்வாறு ராகுல் பேசினார்.








      Dinamalar
      Follow us