sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உள்ளுக்குள் குமுறும் கவுன்சிலர்கள் தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் ஆதிக்கம்

/

உள்ளுக்குள் குமுறும் கவுன்சிலர்கள் தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் ஆதிக்கம்

உள்ளுக்குள் குமுறும் கவுன்சிலர்கள் தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் ஆதிக்கம்

உள்ளுக்குள் குமுறும் கவுன்சிலர்கள் தங்கவயல் நகராட்சி கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வின் ஆதிக்கம்


ADDED : டிச 07, 2024 11:12 PM

Google News

ADDED : டிச 07, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல் நகராட்சித் தலைவரின் அதிகாரம் பறிக்கப்பட்டதா? எம்.எல்.ஏ.,வுக்கு நகராட்சி கவுன்சிலின் கூட்டத்தை நடத்தும் அதிகாரம் உள்ளதா என்ற புதிய சர்ச்சை, தங்கவயல் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தங்கவயல் நகராட்சிக் கூட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ.,வின் அதிகாரம் என்ன? நகராட்சித் தலைவர் மற்றும் ஆணையரின் கடமை என்ன என்று தங்கவயலில் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஆலோசனைகள்


தங்கவயல் நகராட்சி, 1964ல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே தொகுதியின் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பது வழக்கம். அவர்கள், நகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்று கவுரவமாக ஆலோசனைகளை வழங்குவர். தேவையான நிதியை, அரசிடம் இருந்து பெற்று தருவதாக தெரிவிப்பர்.

ஊழல், முறைகேடு நடப்பதாக தெரிய வந்தால், நகராட்சியை கலைக்குமாறு அரசிடம் தெரிவிப்பதும் எம்.எல்.ஏ.,வின் கடமையாக இருந்தது என்பதை தங்கவயல் நகராட்சி அறியும்.

கர்நாடகாவில் பெருநகர மாநகராட்சிகளில் கூட முழு அதிகாரம், மேயருக்கு தான் உண்டு. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்றால், ஆலோசனை மட்டுமே வழங்குவர். மாநகராட்சி கூட்டத்தை நடத்தும் அதிகாரம், அவர்களுக்கு இருந்ததில்லை.

மவுனம்


ஆனால், தங்கவயல் நகராட்சியில் மட்டும் உள்ளாட்சி அதிகாரம், தலைகீழாக மாறி விட்டதோ என கருத தோன்றுகிறது.

நேற்று முன்தினம் நடந்த நகராட்சிக் கூட்டத்தில், தகுதிமிக்க தலைவர் பதவியில் இருந்தவர் மவுனமாக இருக்க, எம்.எல்.ஏ., ரூபகலாவே, கவுன்சில் கூட்டத்தின் முழு அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டதாகவே அவரது செயல்பாடு காட்டுகிறது.

நகராட்சியில் அதிகாரிகள் தில்லுமுல்லு, முறைகேடு, ஊழல் செய்து வருவதாக வெளிப்படையாக கவுன்சிலர்கள் கூறியதற்கு, நகராட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ., அளித்த விளக்கம், அதிருப்தி அளிப்பதாக பல கவுன்சிலர்கள் கருதுகின்றனர்.

எம்.எல்.ஏ.,வே நகராட்சித் தலைவர் போன்று செயல்படும்போது, 'தலைவர் பதவி' எதற்காக என, நான்கு ஆண்டுகளை கடந்தும் பதவியில் உள்ள கவுன்சிலர்கள் குமுறுகின்றனர்.

இப்படியே தொடர்ந்தால், எதிர்க்காலத்தில் நகராட்சித் தலைவர் பதவி என்பது வெறும் 'பொம்மை'. எம்.எல்.ஏ., தான் நகராட்சியில் முழு அதிகாரம் உள்ளவராக திகழ்வார் போலும் என்பது அனுபவமிக்கவர்களின் கருத்தாக உள்ளது

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us