sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெலகாவியில் தம்பதி கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு

/

பெலகாவியில் தம்பதி கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு

பெலகாவியில் தம்பதி கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு

பெலகாவியில் தம்பதி கொலை அழுகிய நிலையில் உடல் மீட்பு


ADDED : நவ 08, 2024 07:51 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: சிக்கோடியில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியர், திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்.பி., பீமா சங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.

பெலகாவி மாவட்டம், அதானி நகரில் மதபாவி சாலையில் வசித்து வந்தவர்கள் நானாசாகேப் சவுகான், அவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த போலீசார், உள்ளே சென்று பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

எஸ்.பி., பீமா சங்கர் குலேத் அளித்த பேட்டி:

இறந்த தம்பதியின் மகன் திலீப், திருட்டு வழக்கு ஒன்றில், அக்., 29 ம் தேதி ஜம்கண்டியில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, மறுநாள் 30ம் தேதி வழக்கறிஞர் ஒருவரையும் சந்தித்துள்ளனர். அதன்பின், இவர்களை யாரும் பார்க்கவில்லை. அதனால் தம்பதியர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது தெரிவித்தனர்.

அதேவேளையில், உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால், மேலோட்டமாக எந்த காயங்களும் தென்படவில்லை. அத்துடன் அவர்களின் வீட்டின் கதவு பலமாக திறக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டதுடன், சில இடங்களில் ரத்தக்கறையும் தென்பட்டன.

இதற்கிடையில், பிரேத பரிசோதனையில், தம்பதியின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாக தெரிவித்தனர். எனவே, திட்டமிட்டு யாரோ கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நான்கு பேரிடம் விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us