sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

/

யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்

யானை தந்தம் வைத்துக்கொள்ள நடிகர் மோகன்லாலுக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்தது ஐகோர்ட்


ADDED : அக் 24, 2025 11:59 PM

Google News

ADDED : அக் 24, 2025 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் வீட்டில், யானை தந்தம் வைத்துக்கொள்ள கேரள அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந் த, 2011, ஆகஸ்ட் மாதம், எர்ணாகுளம் தேவரா பகுதியில் அமைந்துள்ள நடிகர் மோகன்லாலின் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டிலிருந்து யானை தந்தம் கண்டெடுக்கப்பட்டது. யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமம் அப்போது மோ கன்லாலிடம் இல்லை.

பின்னர் கேரள அரசுக்கு மோகன்லால் சமர்ப்பித்த மனுவை தொடர்ந்து, யானை தந்தம் வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை, 2015-ல் மாநில அரசு வழங்கியது.

இதை எதிர்த்து வனவிலங்கு ஆர்வலர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் . 10 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கேரள அரசு, 2015-ல் மோகன்லாலுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக அரசின் கெசட்டில் அறிவிப்பு வெளியிடவில்லை. இது கேரள அரசின் தவறு. எனவே, யானை தந்தம் வைத்துக்கொள்ள மோகன்லாலுக்கு மாநில அரசு வழங்கிய உரிமத்தை ரத்து செய்கிறோம்' என, உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us