sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மூதாட்டிக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க மகனுக்கும், பேத்திக்கும் ஐகோர்ட் உத்தரவு

/

மூதாட்டிக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க மகனுக்கும், பேத்திக்கும் ஐகோர்ட் உத்தரவு

மூதாட்டிக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க மகனுக்கும், பேத்திக்கும் ஐகோர்ட் உத்தரவு

மூதாட்டிக்கு தலா ரூ.7 லட்சம் வழங்க மகனுக்கும், பேத்திக்கும் ஐகோர்ட் உத்தரவு


ADDED : ஜன 31, 2024 05:16 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : வயதான தாயின் வாழ்க்கை நிர்வகிப்புக்கு, ஆண்டுதோறும் தலா 7 லட்சம் ரூபாய் வழங்கும்படி, அவரது மகன் மற்றும் பேத்திக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடகு மாவட்டம், விராஜ்பேட்டில் வசிப்பவர் சாந்தி போப்பண்ணா, 85. கணவரை இழந்தவர். மகனுடன் வசிக்கிறார். இவரது பெயரில் 22 ஏக்கர் காபி எஸ்டேட் இருந்தது.

இதை தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி, மகனும், பேத்தியும் கேட்டனர். மூதாட்டியின் வாழ்க்கை நிர்வகிப்புக்கு, ஆண்டுதோறும் தலா ஏழு லட்சம் ரூபாய் டிபாசிட் செய்வதாக உறுதியளித்தனர்.

இதை நம்பிய மூதாட்டி, 2016ல் காபி எஸ்டேட்டை மகன், பேத்திக்கு அன்பளிப்பாக எழுதிக் கொடுத்தார். 2016 முதல் 2019 வரை, மகனும், பேத்தியும் பணம் டிபாசிட் செலுத்தினர். அதன்பின் நிறுத்திவிட்டனர்.

இதற்கிடையில் மூதாட்டிக்கு தெரியாமல், காபி எஸ்டேட்டை விற்பனை செய்ய மகனும், பேத்தியும் முயற்சித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மூதாட்டி, தான் அன்பளிப்பாக எழுதிக் கொடுத்ததை ரத்து செய்யக்கோரி, 2019ல் தாசில்தாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதன்படி தாசில்தார், 2021 செப்டம்பர் 1ல், சொத்து எழுதிக் கொடுத்ததை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து, மகனும், பேத்தியும் குடகு மாவட்ட கலெக்டரிடம் மேல் முறையீடு செய்தனர். மனுவை ஆய்வு செய்த கலெக்டர், தாசில்தார் உத்தரவை ரத்து செய்து, 2023 மார்ச் 23ல் உத்தரவிட்டார்.

மகனுக்கும், பேத்திக்கும் சொத்து உரிமையை மீண்டும் கிடைக்க செய்தார். மூதாட்டியின் வாழ்நாள் முழுதும், அவர் வாழ்வதற்கு தேவையான அளவுக்கு ஆண்டுதோறும் ஜீவனாம்சம் வழங்கும்படி, மகனுக்கும், பேத்திக்கும் உத்தரவிட்டார்.

கலெக்டர் உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சாந்தி போப்பண்ணா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மூதாட்டிக்கு ஆண்டுதோறும், தலா 7 லட்சம் ரூபாய் வழங்கும்படி, அவரது மகனுக்கும், பேத்திக்கும் நேற்று உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us