ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
ADDED : பிப் 12, 2025 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லக்னோ: ராணுவத்திற்கு எதிரான கருத்துகள் தெரிவித்ததாக, தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு மார்ச் 24ம் தேதி, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரப் பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு,பாரத் ஜோடோ யாத்திரையின் போது, இந்திய ராணுவத்திற்கு எதிரான கருத்துக்களை காங்கிரஸ் எம்.பி., ராகுல் பேசியதாக கூறி, அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இது ராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில், மார்ச் 24ம் தேதி காங்கிரஸ் எம்.பி., ராகுல் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரபிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.

