sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தி.மலையில் துறவியாக சுற்றிய குற்றவாளி சிக்கினார்

/

தி.மலையில் துறவியாக சுற்றிய குற்றவாளி சிக்கினார்

தி.மலையில் துறவியாக சுற்றிய குற்றவாளி சிக்கினார்

தி.மலையில் துறவியாக சுற்றிய குற்றவாளி சிக்கினார்


ADDED : ஆக 19, 2025 01:29 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; தலைமறைவான போக்சோ குற்றவாளியை, நான்கு ஆண்டுகளுக்கு பின், திருவண்ணாமலையில் போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சிற்றிலஞ்சேரியை சேர்ந்தவர் சிவகுமார், 51. இவர், 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 2021ல் ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். போலீசார் தேடினர். இவரை தமிழகத்தில், திருவண்ணாமலை கோவில் அருகே போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

போலீசார் கூறுகையில், 'ஜாமினில் வெளியே வந்த சிவகுமார் தமிழகத்துக்கு தப்பியுள்ளார். இவரிடம் மொபைல்போன் இல்லை. இவரை பிடிக்கும் பணி சவாலாக இருந்தது. சிவகுமார் பிடிபட்டபோது, நான்கு ஆண்டுகளுக்கு முன் இருந்த தோற்றத்திலிருந்து நிறைய மாறியிருந்தார். தாடி வளர்ந்து துறவி போல சுற்றி திரிந்துள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us