sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்

/

குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்

குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்

குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்


ADDED : ஜூன் 15, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரூர்கேலா: ஒடிஷாவில், நக்சல் தேடுதல் வேட்டையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம் அடைந்தார்.

ஒடிஷாவின் மேற்கு சிங்பும் பகுதியில் உள்ள குவாரியில் சில நாட்களுக்கு முன் நக்சல்கள், 2.5 டன் அளவுக்கு வெடிபொருட்களை திருடிச் சென்றனர். இதையடுத்து, ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நக்சல் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக ஒடிஷா - ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நேற்று காலை சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ஒடிஷா சிறப்பு போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூர்கேலா அருகே கே.பாலங் பகுதியில் நக்சல்கள் வைத்துஇருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப்., வீரர் சத்யபான் குமார் சிங்கின், 34, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ரூர்கேலாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார்.

இவர், உத்தர பிரதேசத்தின் குஷி நகரை சேர்ந்தவர். சி.ஆர்.பி.எப்., படையில் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.






      Dinamalar
      Follow us