sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

/

தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

தினமும் ரூ.5.90 கோடி நன்கொடை: ஷிவ் நாடார் தாராளம்

11


ADDED : நவ 08, 2024 06:29 AM

Google News

ADDED : நவ 08, 2024 06:29 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் மிகப்பெரிய நன்கொடையாளராக எச்.சி.எல்., நிறுவனத்தின் ஷிவ் நாடார் தொடர்வதாகவும்; மிக இளவயது நன்கொடையாளராக நிகில் கமத் உருவெடுத்துள்ளதாகவும் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.சி.எல்., நிறுவனர் ஷிவ் நாடார், கடந்த நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியதன் வாயிலாக, நாட்டின் மிகப்பெரிய நன்கொடையாளர் என்ற தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நாள் அடிப்படையில் பார்த்தால், தினமும் அவர் ரூ.5.90 கோடி ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.

'ஹூருண்' நிறுவனத்தின் 2024ம் ஆண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சமுதாய மேம்பாட்டுப் பணிக்காக நன்கொடை வழங்குபவர்களின் பட்டியலை, இந்நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

கடந்த 2023 - 24 நிதியாண்டுக்கான பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த 203 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நன்கொடையாக மொத்தம் 8,783 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். இது, இரண்டு ஆண்டுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 55 சதவீதம் அதிகமாகும். 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 18 நபர்களும்; 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 30 நபர்களும்; 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக 61 நபர்களும் நன்கொடை வழங்கியுள்ளனர்.

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ரோஹிணி நிலகேனி, 154 கோடி ரூபாய் நன்கொடை அளித்ததன் வாயிலாக, அதிக நன்கொடை வழங்கிய இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Image 1341917


'இண்டோ எம்.ஐ.எம்.,' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா சிவுகுலா, 228 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி, அதிக நன்கொடை வழங்கிய 10 நபர்களின் பட்டியலில் முதல் முறையாக இடம்பெற்று உள்ளார். கல்வியை மேம்படுத்தவே நன்கொடையாளர்கள் அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். கல்வி சார்ந்த விஷயங்களுக்காக 3,680 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். மொத்த நன்கொடையாளர்களில் 16 சதவீதம் பேர், மருந்து துறையைச் சேர்ந்தவர்கள்.






      Dinamalar
      Follow us