sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தலித் உரிமை இயக்கம்: தங்கவயலில் பிரசாரம்

/

தலித் உரிமை இயக்கம்: தங்கவயலில் பிரசாரம்

தலித் உரிமை இயக்கம்: தங்கவயலில் பிரசாரம்

தலித் உரிமை இயக்கம்: தங்கவயலில் பிரசாரம்


ADDED : அக் 25, 2024 07:54 AM

Google News

ADDED : அக் 25, 2024 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: அகில இந்திய தலித் உரிமைகள் இயக்கம் சார்பில் நவம்பர் 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் தாவணகெரேயில் மாநாடு நடக்கிறது. இம்மாநாடு குறித்து தங்கவயலில் நேற்று பிரசார கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் ஜனார்த்தன் பேசுகையில், ''இந்த அமைப்பு உயர் ஜாதி வகுப்பினருக்கு எதிரான இயக்கம் இல்லை. தாழ்த்தப்பட்ட இனத்தவரின் உரிமைகளை பெறுவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

''அனைத்து அரசியல் கட்சிகளிலும் எஸ்.சி., - எஸ்.டி., அமைப்புகள் உள்ளது போன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அகில இந்திய அளவில் புதிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாநாடு தாவணகெரேயில் நவம்பர் 8, 9ல் நடக்கிறது. இது குறித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது,'' என்றார்.

வக்கீல் ஜோதிபாசு பேசுகையில், ''கல்வி, வேலை வாய்ப்பு, சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை கோருவதற்காகவே இந்த இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் ஓட்டுகளை குறி வைப்பதை எதிர்க்க இந்த இயக்கம் அவசியம் தேவைப்படுகிறது,'' என்றார்.

ஹாசன் தர்மராஜ், பங்கார்பேட்டை வினோத் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய அமைப்பின் தங்கவயல் தலைவராக ஸ்ரீகுமார், துணைத் தலைவராக ராஜன், செயலராக டேக்கல் அம்பரிஷ், பொருளாளராக புஷ்பராஜ் மற்றும் செயற்குழுவுக்கு 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us