அயோத்தி ராமர் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
அயோத்தி ராமர் கோயிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம்
UPDATED : மே 01, 2024 08:31 PM
ADDED : மே 01, 2024 08:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று( மே.01) அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.
உபி. மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர்கோயிலை கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து கருவறையில் பால ராமர் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்தார்.
இதில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று முதன்முதலாக அயோத்தி சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு ராமர் கோயிலில் சாமி தரிசனம் செய்து சிறப்பு ஆராதனை செய்தார். முன்னதாக ஹனுமன் கார்ஹி கோயிலுக்கும் சென்றார்.
உ.பி. வந்திருந்த ஜனாதிபதியை கவர்னர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.