sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மகள் ஆணவ கொலை தந்தை தலைமறைவு

/

மகள் ஆணவ கொலை தந்தை தலைமறைவு

மகள் ஆணவ கொலை தந்தை தலைமறைவு

மகள் ஆணவ கொலை தந்தை தலைமறைவு


ADDED : பிப் 08, 2025 09:14 PM

Google News

ADDED : பிப் 08, 2025 09:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதரர்: தன் பேச்சை மதிக்காமல், வேறு ஜாதி இளைஞரை காதலித்த மகளை தந்தை அடித்துக் கொலை செய்தார். தலைமறைவான அவரை போலீசார் தேடுகின்றனர்.

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தின் பரகேன் தான்டா கிராமத்தில் வசிப்பவர் மோதிராம் ஜாதவ், 50. இவரது மகள் மோனிகா, 22. இவர் அதே கிராமத்தின் வேறு ஜாதி இளைஞரை காதலித்தார். இது மோதிராம் ஜாதவுக்கு பிடிக்கவில்லை. 'அந்நபரை காதலிக்க வேண்டாம். அவரை விட்டு விலகிவிடு. வேறு நல்ல வரன் பார்த்து திருமணம் செய்கிறோம்' என, மகளுக்கு அவர் புத்திமதி கூறினார். மோனிகா கேட்கவில்லை.

இதே விஷயமாக மகளுக்கும், தந்தைக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடந்தது. மகள் தன் பேச்சை கேட்கவில்லை என்ற கோபத்தில் மோதிராம் இருந்தார்.

நேற்று காலையும், இந்த விஷயமாக மகளுடன் வாக்குவாதம் நடந்தது. மோனிகா, தன் காதலில் உறுதியாக இருந்தார். 'காதலரையே திருமணம் செய்து கொள்வேன்' என, பிடிவாதம் பிடித்தார்.

கோபமடைந்த தந்தை, உருட்டுக்கட்டையால் மகளை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி தலைமறைவானார். தகவலறிந்து அங்கு வந்த அவுராத் போலீசார், விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய மோதிராம் ஜாதவை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us