sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

/

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமரிடம் பேசியது என்ன? சந்திரசூட் சொல்வது இதுதான்!

12


ADDED : அக் 28, 2024 03:29 PM

Google News

ADDED : அக் 28, 2024 03:29 PM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தனது வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற சந்திப்புகளில் நீதித்துறை சார்ந்த விவகாரங்கள் ஆலோசனை செய்யப்படாது எனக்கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா செப்., 7 ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மோடி, வழிபாடு நடத்தினார். மோடியை, சந்திரசூட் குடும்பத்தினர் வரவேற்று அழைத்து சென்றனர். இது குறித்த வீடியோவை மோடி 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அப்போது இதனை அரசியலாக்கிய சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களை அரசியல்வாதிகள் எப்படி சந்திக்கலாம் என கேள்வி எழுப்பின. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக டில்லியில் நடந்த லோக்சட்டா கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரசூட் கூறியதாவது: இதுபோன்ற சந்திப்புகள் ஏன் நடக்கின்றன என பலர் நினைக்கின்றனர். அப்போது நீதித்துறை சார்ந்த விஷயங்கள் ஆலோசனை செய்யப்படாது.

நீதித்துறை மீது அரசியல்வாதிகள் அதிக மரியாதை வைத்துள்ளது நமது அரசியலமைப்பின் முதிர்ச்சியை காட்டுகிறது. இது அனைவருக்கும் தெரியும். நீதித்துறைக்கான நிதியை மாநிலங்கள் ஒதுக்குகின்றன. இது நீதிபதிகளுக்கானது கிடையாது. மாவட்டங்களில் நீதிமன்ற கட்டடங்கள், நீதிபதிகளுக்கான வீடுகள் தேவைப்படுகின்றன. இதற்காக தலைமை நீதிபதிகள், முதல்வர்களை சந்திக்க வேண்டும்.

நானும் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். புதிதாக நியமிக்கப்படும் தலைமை நீதிபதி, முதல்வரை அவரது வீட்டில் சந்திப்பார். பிறகு, தலைமை நீதிபதியை அவரது வீட்டில் முதல்வர் சந்திப்பார். இந்த சந்திப்பிற்கு என திட்டம் இருக்கும். அப்போது நீதித்துறை சார்ந்து நடக்கும் திட்டங்கள் குறித்து நீதிபதியிடம் முதல்வர் விளக்குவார். இதற்காக முதல்வரை நீதிபதி சந்திக்கக்கூடாதா ? கடிதம் மூலம் தகவல் பரிமாறினால், திட்டங்கள் முடிவடையாது.

இந்த சந்திப்பின் போது நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து எந்த முதல்வரும் எந்த கேள்வியையும் கேட்க மாட்டார். அது போன்ற தருணங்களில் நீதித்துறை தொடர்பான கருத்துக்களை அவர்கள் ஒருபோதும் நிகழ்த்தக் கூடாது.

சுதந்திர தினம், குடியரசு தினம், திருமணம் அல்லது இரங்கல் நிகழ்ச்சிகளின் போது முதல்வரும், தலைமை நீதிபதியும் சந்தித்து கொள்வார்கள். இதனால் நீதித்துறை பணிகளில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என கேட்கின்றனர். இவ்வாறு சந்திரசூட் கூறினார்.






      Dinamalar
      Follow us