sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

/

முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

முடிவுக்கு வருகிறது முட்டுக்கட்டை அரசியலமைப்பு குறித்து விவாதம்

4


ADDED : டிச 03, 2024 02:25 AM

Google News

ADDED : டிச 03, 2024 02:25 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், இதுவரை எவ்வித விவாதங்களும் இல்லாமல் அமளியால் முடக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க, இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

பார்லிமென்ட குளிர்கால கூட்டத்தொடர், கடந்த நவ., 25ல் துவங்கியது. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட அமளியால், இரு சபைகளும் முடங்கின.

அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, கடந்த நவ., 26ல் நடந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். இந்த நிகழ்ச்சி மட்டுமே இதுவரை நடந்துள்ளது.

பார்லிமென்ட் முட்டுக்கட்டைக்கு முடிவு காண்பது தொடர்பாக, அரசியல் கட்சிகளின் சபைத் தலைவர்களுக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டத்தில், பார்லிமென்டை சுமுகமாக நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன் 75வது ஆண்டையொட்டி, இரு சபைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின; இது ஏற்கப்பட்டது.

இதன்படி, லோக்சபாவில், 13 மற்றும் 14ம் தேதிகளிலும், ராஜ்யசபாவில், 16 மற்றும் 17ம் தேதிகளிலும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று தெரிவித்தார். இதையடுத்து, நீண்ட முடக்கங்களுக்குப் பின், பார்லிமென்டில் விவாதம் நடக்க உள்ளது.

பெயர் பலகைகள்

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் இருக்கையில், அவர்களுடைய பெயர்ப் பலகைகளை வைக்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது. இதன் வாயிலாக, எம்.பி.,க்களை சுலபமாக அடையாளம் காண முடியும். ஒவ்வொரு எம்.பி.,க்கும், அவர்களுடைய இருக்கைக்கு ஏற்ப, ஒரு குறிப்பிட்ட எண் வழங்கப்படும். அந்த எண்ணும், இந்த பெயர்ப் பலகையில் இடம்பெற உள்ளது.



நேற்றும் அலுவல்கள் முடக்கம்

- நமது டில்லி நிருபர் - லோக்சபாவில், நேற்று காலை சபை கூடியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேர அலுவலை எடுத்தார். ஆனால், சபையை ஒத்திவைத்துவிட்டு அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.மணிப்பூர் கலவரம் குறித்து தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகள், ஏற்கனவே தாங்கள் அளித்திருந்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.இவை எதையும் ஏற்க முடியாது என்று சபாநாயகர் கைவிரித்து விட்டதால் அமளி அதிகமானது. இதனால் சபை ஓரிரு நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா - சீனா இடையிலான உறவு குறித்தும், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்தும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்வதாக இருந்தது.மிகுந்த எதிர்பார்ப்பு சபையில் இருந்தும்கூட, அமளி காரணமாக சபை நாள் முழுதும் ஒத்தி வைக்கப்பட்டதால் அந்த அறிக்கை தாக்கல் நடைபெறாமலே போய்விட்டது. ராஜ்யசபாவில், காலையில் சபை அலுவல்கள் துவங்கியதுமே எதிர்க்கட்சிகள் அளித்திருந்த 18 நோட்டீஸ்களையும் ஏற்க முடியாது என்று, சபை தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்துவிடவே அமளி துவங்கியது. சபை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு அதானி லஞ்ச விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரினர். இதையடுத்து மதியம் வரை சபை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியபோதும் அமளி ஆரம்பமாகவே மறுபடியும் நாள்முழுதும் ஒத்திவைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us