sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

/

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு


ADDED : மார் 29, 2025 02:54 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள், குடும்ப பென்ஷன்தாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஜூலையில் 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. தற்போது, அதை மேலும் 2 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அகவிலைப்படியை அதிகரிக்க, டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது, கடந்த ஜன., 1 முதல் கணக்கிடப்படும். ஏப்ரல் மாத சம்பளத்தில் கூடுதல் அகவிலைப்படியும், ஜன., பிப்., மார்ச் ஆகிய மூன்று மாத நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும்.

இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 6,614 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 66.55 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவர். ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் இது வழங்கப்படுகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் வைத்து, கோடைக்கால காரீப் பருவ விவசாயப் பணிகளுக்காக பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, 37,216 கோடி ரூபாய் மானியம் வழங்கவும், பீஹாரில் கிழக்கு கோசி கால்வாய் சீரமைப்பு மற்றும் மகாநந்தா படுகை நீர்ப்பாசன திட்டத்துக்கு மத்திய அரசின் பங்காக 3,652.56 கோடி ரூபாய் வழங்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் நம் நாட்டின் மின்னணு உற்பத்தி 5 மடங்கு அதிகரித்து, 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியும் 6 மடங்கு அதிகரித்து, 2.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட, குறைகடத்தி அல்லாத மின்னணு சாதன உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு 22,919 கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது, இந்த துறையில வேலை வாய்ப்பை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us