sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு

/

பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு

பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு

பாலம் இடிந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு


ADDED : ஜூலை 11, 2025 04:48 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வதோதரா: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 16 ஆக உயர்ந்து உள்ளது.

குஜராத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும், 40 ஆண்டு கால பழமையான பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. மஹிசாகர் ஆற்றில் உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பகுதி இடிந்ததில், லாரி, வேன், ஆட்டோ என ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

இதில், குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மேலும் ஐந்து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக கலெக்டர் அனில் தமேலியா தெரிவித்தார்.

இதையடுத்து, பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

மாயமான இரண்டு பேரின் உடல்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படையினர், ஆற்றின் அடியில் தேடுகின்றனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.






      Dinamalar
      Follow us