sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

/

ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

ராகுல் மீதான அவதுாறு வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைப்பு

13


ADDED : ஜன 20, 2025 04:03 PM

Google News

ADDED : ஜன 20, 2025 04:03 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜ.,வுக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல், தேர்தல் பிரசாரத்தில், அமித் ஷாவை கொலை குற்றவாளி என்று அழைத்ததாகக் கூறி, 2018ம் ஆண்டு நவீன் ஜா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஜார்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் நடைபெறும் விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ராகுல் தரப்பில் சுப்ரீம் கோரட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அவதுாறு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ராகுல் தாக்கல் செய்த சிறப்பு விடுவிப்பு மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ராகுல் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பாதிக்கப்பட்டவர் மட்டுமே குற்றவியல் அவதூறு புகாரை தாக்கல் செய்ய முடியும் என்றும், புகாரை ஒரு பிரதிநிதி தரப்பினரால் தாக்கல் செய்ய முடியாது என்றும் பல தீர்ப்புகள் காட்டியுள்ளன என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து சிங்விக்கு பதிலளிக்க புகார்தாரரான நவீன் ஜா மற்றும் ஜார்க்கண்ட் அரசுக்கு சுப்ரீம் கோர்ட், நான்கு வார கால அவகாசம் வழங்கியது. மேலும் உத்தரவு வரும் வரை ராகுலுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ளது.






      Dinamalar
      Follow us