sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

/

அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

8


UPDATED : பிப் 05, 2025 10:14 PM

ADDED : பிப் 05, 2025 07:15 AM

Google News

UPDATED : பிப் 05, 2025 10:14 PM ADDED : பிப் 05, 2025 07:15 AM

8


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல், இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று (பிப்., 05) தேர்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வடகிழக்கு டில்லியில் அதிகமாகவும், தென் கிழக்கு டில்லியில் குறைவாகவும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.



மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி வேண்டுகோள்!

இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும்.

இத்தருணத்தில், முதல்முறையாக ஓட்டளிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us