sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

/

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: லக்னோ டாக்டர் கைது

5


ADDED : நவ 13, 2025 06:59 PM

Google News

5

ADDED : நவ 13, 2025 06:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ : டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த டாக்டர் பர்வேஷ் அன்சாரி(41) என்பவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டில்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரை சேர்ந்த இரண்டு டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியதாக லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாகீன் ஷாகித் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஷாகீன் ஷாகித்தின் சகோதரர் பர்வேஸ் அன்சாரி என்ற டாக்டரையும் உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், உ.பி., மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் உதவியுடன் கைது செய்துள்ளனர். ' தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்ததில் பர்வேஷ் அன்சாரிக்கு முக்கிய பங்கு உண்டு என தெரிவித்துள்ளனர்.

யார் இவர்


இந்த அன்சாரி, லக்னோவில் கடந்த 2011 ல் எம்பிபிஎஸ் முடித்தார். பிறகு 2015ம் ஆண்டு ஆக்ராவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எம்டி முடித்தார். பிறகு, 2021 வரை லக்னோவில் உள்ள தனியார் பல்கலையில் படித்து வந்தார்.

வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் காஷ்மீர் டாக்டர் அதீல் கைது செய்யப்பட்ட நவ.,6க்கு முதல் நாள் இவர், ராஜினாமா செய்தார். அன்சாரி தனியாக வீடு ஒன்று வாங்கியுள்ளதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

சோதனை


அந்த வீட்டில் கடந்த நேற்று முன்தினம்(நவ.,11) முதல் 12 வரை பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்

அதில்மொபைல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள்

மின்சார சாதனங்கள் மற்றும் லேப்டாப்கள்

முக்கி ஆவணங்கள்

கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த தூசி நிறைந்த பர்னீச்சர்கள் மற்றும் பயன்படுத்தப்படாத கார்கள் உள்ளிட்டவை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டில்லி செங்கோட்டையில் நடந்த குண்டுவெடிப்பில் இவருக்கு உள்ள பங்கு குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us