டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு
டில்லி தலைமை செயலர் பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு
ADDED : மே 28, 2024 09:10 PM

புதுடில்லி: டில்லி தலைமை செயலாளர் நரேஷ்குமார் பதவியை மேலும் 3 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. தலைமைச் செயலராக 1987 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான நரேஷ் குமார் உள்ளார். இவரது பதவிக்காலம் கடந்த 2023 நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.
அப்போது அவரது பணிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து அவரது பணிக்காலம் வரும் மே. 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் நரேஷ்குமாரின் பணி காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைவதால், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நரேஷ்குமார் வரும் ஆகஸ்ட் மாதம் வரை டில்லி தலைமை செயலராக நீடிப்பார்.