sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு

/

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் டில்லி அரசு முடிவு


ADDED : ஏப் 19, 2025 10:15 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வெள்ளத் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை தீர்க்க, அரசின் அனைத்து துறைகளின் பணிகளையும் மேம்படுத்த, ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து, டில்லி அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ரேகா குப்தா மாநகர் முழுதும் விரிவான ஆய்வு செய்தார். அதன்பின் மின்சாரம், பொதுப்பணி, சுகாதாரம், போக்குவரத்து, போலீஸ் உள்ளிட்ட துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். டில்லி மாநகரில் நெரிசல் ஏற்படும் 233 இடங்கள் போக்குவரத்து போலீசாரால் கண்டறியப்பட்டுள்ளன.

அந்தக் கூட்டத்தில், வெள்ளத் தடுப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், அனைத்து துறை பணிகளையும் மேம்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த கட்டுபாட்டு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் அனைத்து துறை பணிகளும் தொய்வின்றி விரைவாக நடக்கும்.

அதேபோல, 4,780 இருண்ட பகுதிகள் கண்டறியப்பட்டு, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 3,000 இடங்களில் இருண்ட இடங்களில் 1,989 இடங்களில் தெரு விளக்குகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் தெருவிளக்குகளை சீரமைக்கும் பணி 10 நாட்களில் நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us