sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 30, 2025 ,கார்த்திகை 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வங்கக்கடலில் அக்.,14ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் 'அப்டேட்'

/

வங்கக்கடலில் அக்.,14ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் 'அப்டேட்'

வங்கக்கடலில் அக்.,14ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் 'அப்டேட்'

வங்கக்கடலில் அக்.,14ல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு: வானிலை மையம் 'அப்டேட்'


UPDATED : அக் 12, 2024 03:19 PM

ADDED : அக் 12, 2024 01:05 PM

Google News

UPDATED : அக் 12, 2024 03:19 PM ADDED : அக் 12, 2024 01:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'வங்கக் கடலில் வரும் அக்., 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது' என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில், தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வரும் அக்., 14ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (அக்.,12) முதல் அக்டோபர் 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.



கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக்.,12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில், தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகாக, ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us