sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

/

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மோடியால் மட்டும் முடியும்: அமித்ஷா பேச்சு

3


UPDATED : ஏப் 25, 2024 04:47 PM

ADDED : ஏப் 25, 2024 04:46 PM

Google News

UPDATED : ஏப் 25, 2024 04:47 PM ADDED : ஏப் 25, 2024 04:46 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரகுநந்தன் ராவை ஆதரித்து தேர்தல் பேரணியில், அமித் ஷா பேசியதாவது: சமீபத்தில் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை டில்லியின் ஏ.டி.எம்., ஆக்கியுள்ளது. காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை மேற்கொள்ளவில்லை.

ஊழலற்ற ஆட்சி

நீங்கள் ஓட்டளித்து, மோடி 3வது முறையாக பிரதமர் ஆகிய பிறகு, ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார். தெலுங்கானாவில் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வதும் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். இந்த முறை தெலுங்கானா மக்கள் பிரதமர் மோடியின் பக்கம் உள்ளனர்.

4 சதவீத இடஒதுக்கீடு

எல்லா இடங்களிலும் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம். அதனை எஸ்.சி, எஸ்.டி., பி.சி., உள்ளிட்ட பிரிவினருக்கு பகிர்ந்து அளிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us