3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு
3 வது முறை பெரும்பான்மை கொண்ட அரசு: ஜனாதிபதி முர்மு பாராட்டு
UPDATED : ஜூன் 27, 2024 11:59 AM
ADDED : ஜூன் 27, 2024 11:25 AM

புதுடில்லி: ‛‛ மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி '' என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
பார்லிமென்ட் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தியதாவது:
* பாரதத்தில் மீண்டும் பெரும்பான்மை கொண்ட அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
* 60 ஆண்டுக்கு பின் ஆட்சியில் இருக்கும் அரசு 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
* அரசின் மீது மக்கள் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
*லோக்சபா தேர்தல் என்பது உலகளவில் நடக்கும் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா ஆகும்.
* இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
* இந்தியா உலக பொருளாதாரத்தில் 3 வது இடத்தை பிடிக்க வேகமாக முன்னேறி வருகிறது.
* 40 ஆண்டுகளில் வன்முறை, போராட்டம் இல்லாத வகையில் அமைதியாக தேர்தல் நடந்துள்ளது.
*இம்முறையும் பெண்கள் அதிகளவு ஓட்டளித்து வரலாறு படைத்துள்ளனர்.
*இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.அதில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும்
*மாநிலங்களின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற சிந்தனையின் அடிப்படையில் அரசு செயலாற்றுகிறது.
*சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் என்ற சிந்தனையுடன் இந்தியா வேகமாக முன்னேறுகிறது.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் கூறினார்.