ADDED : ஜன 15, 2026 12:17 AM
சபரிமலை: சபரிமலை பொன்னம்பல மேட்டில் நேற்று மூன்று முறை தெரிந்த மகரஜோதியை தரிசித்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் டிச., 30ல் துவங்கிய மகர விளக்கு காலத்தின் நிறைவாக நேற்று மகரஜோதி பெருவிழா நடந்தது.
மாலை 5:30 மணிக்கு திருவாபரண பெட்டிகளை வரவேற்கச் செல்லும் தேவஸ்வம் போர்டு அலுவலர்களுக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார்.
மாலை 6:25மணிக்கு, 18- ம்படி அருகே வந்த திருவாபரண பவனியில் இரண்டு பெட்டிகளும் மாளிகை புறம் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
ஒரு பெட்டி, 18 படிகள் வழியாக சன்னிதி வந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் அதை வாங்கி, 6:28 மணிக்கு நடையை அடைத்தனர்; அய்யப்பன் விக்ரகத்தில் அணிவித்து, 6:41 மணிக்கு தீபாராதனை நடத்தினர்.
அந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஒளி விட்டு பிரகாசித்தது. தீபாராதனை நடைபெற்று கொண் டிருந்த போதே, பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தந்தது.

