sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

/

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம்


ADDED : பிப் 15, 2024 12:43 AM

Google News

ADDED : பிப் 15, 2024 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை:கேரளாவில் தமிழகத்தை விட ஒரு நாள் தாமதமாக மாசி மாதம் நேற்று துவங்கியது. மாசி மாதம் 1ம் தேதி அதிகாலை அய்யப்பனை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சன்னிதியில் கூடியிருந்தனர்.

அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த போது, 18 படிக்கு கீழ் உள்ள திருமுற்றத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

போலீசார் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் கூட்டத்தை ஒழுங்கு படுத்துவதிலும் சிரமம் இருந்தது. நடை திறந்ததும், தந்திரி மகேஷ் மோகனரரு அய்யப்பனுக்கு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார்.

தொடர்ந்து கணபதி ஹோமம், உஷ பூஜை, களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை. புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழ பூஜை நடந்தது. பிப்., 18 வரை எல்லா நாட்களிலும் இந்த பூஜை நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.






      Dinamalar
      Follow us