sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

/

கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி


ADDED : ஜன 05, 2025 06:11 AM

Google News

ADDED : ஜன 05, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், டில்லியைச் சேர்ந்த பெண் டாக்டரை விடுவித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

டில்லியின் ஹரி நகரில் உள்ள ஒரு மருத்துவ பரிசோதனை மையத்தில், கருவின் பாலினம் தெரிவிக்கப்படுவதாக 2020 ஆகஸ்டில் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு போலி நாடகம் நடத்தப்பட்டது.

இதன்படி, கர்ப்பிணி ஒருவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு, அங்குள்ள டாக்டர், மருத்துவ பரிசோதனைகளை செய்தார்.

அந்த பரிசோதனை மையத்தில் உள்ள வேறொருவர், அந்த பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால், பரிசோதனை நடத்திய டாக்டர் மீது, போலீசில் வழக்கு தொடரப்பட்டது.

இதை எதிர்த்து, அந்த டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த பரிசோதனை மையத்தில், கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவிக்கப்படுவது தொடர்பாக போலி நாடகம் நடத்தப்பட்டது.

அந்த பரிசோதனை மையத்தைச் சேர்ந்த வேறொருவர், சிசுவின் பாலினத்தை தெரிவித்துள்ளார். ஆனால், டாக்டர் தெரிவித்ததாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு உட்பட்டே டாக்டர் பரிசோதனைகளை செய்துள்ளார். அவர் பாலினத்தை தெரிவித்ததை உறுதி செய்யும் எந்த ஒரு ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை.

அவரது நடைமுறை எதுவும் சட்டத்துக்கு புறம்பானதாக இல்லை. அதனால், அவர் மீதான எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us