sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை'

/

"கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை'

"கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை'

"கருணை மனு மீது முடிவு கால வரையறை இல்லை'


ADDED : செப் 01, 2011 01:59 AM

Google News

ADDED : செப் 01, 2011 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : 'தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு மீது, ஜனாதிபதி முடிவு எடுப்பதற்கு கால வரையறை எதுவும் கிடையாது' என, மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டில் பதில் அளிக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜிவ் கொலை வழக்கில், கருணை மனு நிராகரிக்கப்பட்ட குற்றவாளிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும், சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். அதில், தங்கள் கருணை மனு மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு 11 ஆண்டுக்காலம் எடுத்துக் கொண்டதை குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி சென்னை ஐகோர்ட், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இதுபோன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணை மனு மீது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதற்கான கால வரையறை எதுவும் இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதனால் மனு தாரர்களின் வாதம் செல்லுபடியாகாது. இதை, மத்திய அரசு, சென்னை ஐகோர்ட்டில் குறிப்பிட வாய்ப்பிருக்கிறது' என தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us