sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமலாக்க துறையினர் மீது தினேஷ் குண்டுராவ் பாய்ச்சல்

/

அமலாக்க துறையினர் மீது தினேஷ் குண்டுராவ் பாய்ச்சல்

அமலாக்க துறையினர் மீது தினேஷ் குண்டுராவ் பாய்ச்சல்

அமலாக்க துறையினர் மீது தினேஷ் குண்டுராவ் பாய்ச்சல்


ADDED : நவ 22, 2024 07:17 AM

Google News

ADDED : நவ 22, 2024 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மங்களூரு: ''பா.ஜ.,வின் அரசியல் கருவியாகவே அமலாக்கத் துறை செயல்படுகிறது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

மங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து தாக்கும் பா.ஜ.,வின் துணை அமைப்பே அமலாக்கத்துறை. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. பா.ஜ.,வின் அரசியல் கருவி.

அதன் மீதான நம்பிக்கையை, மக்கள் இழந்து விட்டனர். தவறான தகவல்களை பரப்புவது போன்றவை அதன் சிறப்பம்சமாகும்.

கர்நாடகாவுக்கு, நபார்டு வங்கிக் கடன் குறைக்கப்பட்டதற்கு எதிராக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., - எம்.பி.,க்கள் குரல் எழுப்பாதது ஏன். மாநிலத்திற்காக குரல் கொடுக்காத அவர்கள், மத்திய அரசின் அடிமைகளாக மாறியுள்ளனர்.

கர்நாடக அரசு மருத்துவமனைகளில், பல ஆண்டுகளுக்கு பின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் பணம், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் தலைமையிலான ஏ.ஆர்.எஸ்., எனும் ஆரோக்கிய பாதுகாப்பு சமிதி மூலம் மருத்துவமனைக்கே பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us