sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பன்சூரி மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி

/

பன்சூரி மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி

பன்சூரி மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி

பன்சூரி மீதான அவதுாறு வழக்கு தள்ளுபடி


ADDED : பிப் 20, 2025 10:31 PM

Google News

ADDED : பிப் 20, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரோல்பாக்:கடந்த 2023 அக்டோபர் 5ல் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் பேட்டி அளித்தார்.

இதுதொடர்பாக டில்லி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பன்சூரி மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்திர ஜெயின் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். தன் மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

தொலைக்காட்சி பேட்டியில் என் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 1.8 கிலோ தங்கம், 133 தங்க நாணயங்கள் தவிர, 3 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக பன்சூரி கூறினார்.

எனக்கு எதிராக அவதுாறு கருத்துக்களை பன்சூரி தெரிவித்தார். அதை லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். என்னை ஊழல்வாதி, மோசடி செய்பவர் என்று கூறி, என்னை பற்றி பன்சூரி ஸ்வராஜ் அவதுாறு பரப்பினார்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை கூடுதல் தலைமை நீதிபதி நேஹா மிட்டல் விசாரித்து வந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் பன்சூரி ஸ்வராஜுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்குமென கூறப்பட்டது.

இந்த நிலையில் சத்யேந்திர ஜெயின் தொடர்ந்த அவதுாறு வழக்கை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.






      Dinamalar
      Follow us