sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

/

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி


ADDED : மார் 16, 2024 02:30 AM

Google News

ADDED : மார் 16, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி, நந்தினி சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாட்டில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர். தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயல்பாடு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்த மனுவை இந்த நீதிமன்றம் ஏற்கனவே ஆய்வு செய்துள்ளது.

இன்னும் எத்தனை மனுக்களை பரிசீலிக்க வேண்டும்.

சமீபத்தில் கூட யாருக்கு ஓட்டளித்தோம் என்பதை சரிபார்க்க உதவும் ஒப்புகைச் சீட்டு தொடர்பான மனுவை விசாரித்தோம். ஒவ்வொரு முறையிலும் சாதக மற்றும் பாதகமான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us