sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'

/

'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'

'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'

'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'

18


ADDED : ஜன 04, 2024 07:03 AM

Google News

ADDED : ஜன 04, 2024 07:03 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்., முன்னாள் தலைவர் சோனியா:

இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர்; இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.

டவுட் தனபாலு:

எந்த மதத்துக்கும் சார்பாகவோ, எதிராகவோ செயல்படாமல் இருப்பது தான் உண்மையான மதச்சார்பின்மை... ஆனா, உங்க கூட்டணியில இருக்கிற தி.மு.க., தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது யார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுமே!

---

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது.

டவுட் தனபாலு:

இந்த மாதிரி புது புது திட்டங்களை அறிவிக்கிறது நல்லது தான்... அதே நேரம், அரசு மருத்துவமனைகளை தேடி வர்ற நோயாளிகளுக்கு நல்லபடியா சிகிச்சை அளித்து, அவங்களை குணப்படுத்தி அனுப்புறதுலயும் அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!

---

பத்திரிகை செய்தி:

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி ஆஜரானார். ஏற்கனவே இவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டவுட் தனபாலு:

தமிழக காங்., தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என, கார்த்தி துடியா துடிக்கிறார்... இத்தனை வழக்குல சிக்கியவருக்கு பதவியை குடுத்தா, நாளைக்கு திஹார் ஜெயில்ல இருந்து தான், கட்சி பணியை கவனிப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!






      Dinamalar
      Follow us