சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை உற்சாகம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் பரவசம்
சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை உற்சாகம்: விளக்கு ஏற்றி பக்தர்கள் பரவசம்
UPDATED : நவ 01, 2024 04:42 PM
ADDED : நவ 01, 2024 04:36 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாரதா கோயிலில் தீபாவளி பண்டிகை விளக்குகள் ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இந்தியா எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி அருகே குப்வாரா மாவட்டத்தின் டீட்வால் என்ற பகுதியில் உள்ள சாரதா தேவி கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. கடந்த 1947 ம் ஆண்டு நாடு பிரிவினைக்கு பிறகு, காஷ்மீரை பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடியினர் ஆக்கிரமித்த போது இக்கோயில் தீவைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அருகில் இருந்த குருத்வாரா மற்றும் தர்மசாலாவும் சேதப்படுத்தப்பட்டது.
இக்கோயிலை, சிருங்கேரி மடத்தின் ஆதரவுடன் மீண்டும் கட்டும் பணி 2021ம் ஆண்டு துவங்கியது. அதே இடத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. 75 ஆண்டுகளுக்கு பிறகு, இக்கோயிலில் கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது.