sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

/

தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

தி.மு.க.,வும், காங்கிரசும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை பேட்டி

26


UPDATED : ஜன 23, 2025 06:25 PM

ADDED : ஜன 23, 2025 06:16 PM

Google News

UPDATED : ஜன 23, 2025 06:25 PM ADDED : ஜன 23, 2025 06:16 PM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும்'', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நன்றி


கோவையில் அண்ணாமலை அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை முழுவதுமாக ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். அப்பகுதி மக்கள் இன்று இரவு நம்மதியாக தூங்கப் போகின்றனர்.

5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பு பயன்பாடு தமிழகத்தில் இருந்தது என்ற ஆதாரத்தை முதல்வர் முன்வைத்துள்ளார். இது ஒவ்வொரு தமிழனுக்கும் சந்தோசமான விஷயம். தமிழனாக பெருமைப்பட்டு கொள்வோம்.

தி.மு.க., தூண்டுதல்


திருப்பரங்குன்றம் முருகனின் ஸ்தலம். ஆண்டாண்டு காலமாக எந்த பிரச்னையும் இல்லாமல் இருக்கும் ஸ்தலம். 1931ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு தெளிவாக உள்ளது. தி.மு.க., தூண்டுதலின் பேரில், எம்.பி., நவாஸ் கனி பிரச்னையை உருவாக்குகிறார். திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பா.ஜ., பெரிய இயக்கத்தை நடத்தும்.ஒரு எம்.பி., மதமோதலுக்கு காரணமாக இருக்கிறார். மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

நம்பிக்கை

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது முட்டாள்தனமானது. நாட்டின் எல்லையை திருத்துவதற்கு அரசியலமைப்பின் முதலாவது சட்டப்பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். ஆனால், செய்யவில்லை. கச்சத்தீவை கொடுத்ததினால், இந்தியாவுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்கப்போவதும் இல்லை. ஒப்பந்தம் போட்ட போது முதலில் அங்கு மீனவர்கள் வலையை உலர்த்திக் கொள்ளலாம் என நாடகம் போட்டனர். பிறகு அதனை ரத்து செய்துவிட்டனர்.கச்சத்தீவை கொடுத்ததற்கு தி.மு.க.,வும் காங்கிரசும் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பிரதமர் பேசுகிறார் என்றால், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு உறுதுணையாக நிற்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இல்லை என்றால், பிரதமர் பேச மாட்டார்.

நேரமில்லை

நாங்கள் ஈ.வெ.ரா.,கொள்கையை ஏற்கவில்லை என்றாலும் அவரை அவமானப்படுத்த மாட்டோம். மக்கள் அவரை மறந்து விட்டனர். புது தலைமுறை வந்துள்ளது. அவர்களின் அரசியல் மொழி வேறு. சீமான் வேறு மாதிரி அணுகுமுறையை கொண்டு உள்ளார்.ஈ.வெ.ரா.,வை தாண்டி எங்கோ சென்றுவிட்டோம். வளர்ச்சி அரசியல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் பேசவே எங்களுக்கு நேரமில்லை.

பொய்

முதல்வர் நிறைய பொய் பேச ஆரம்பித்து விட்டார். தேர்தல் வர இன்னும் ஒரு வருடம் உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஒரு வருடம் பொய் பேசினார். 3 வருடம் பொய் பேசாமல் இருந்தார். இப்ப பொய் பேசுவதற்கு நேற்று துவங்கிவிட்டார். தேர்தல் வாக்குறுதியை பற்றி பேசுவதற்கு அருகதை இல்லாத ஒரு கட்சி தி.மு.க., வெள்ளை அறிக்கை கொடுப்பதில் என்ன பிரச்னை.

வெள்ளை அறிக்கை கொடுத்தால் பிரச்னை தீர்ந்துவிடும். இதை செய்யாதவரை தி.மு.க.,வை மக்கள் நம்ப போவது கிடையாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.






      Dinamalar
      Follow us