உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 08, 2024 12:17 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: மத்திய அரசை கண்டித்து தி.மு.க., எம்.பி.,க்கள் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்திற்கு உரிய வெள்ள நிவாரண நிதி வழங்கவில்லை என குற்றம்சாட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நடந்த போராட்டத்தில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களும் பங்கேற்றனர். அப்போது , பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
