/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு
/
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெறும் ஆர்.எஸ்.பாரதி சென்னிமலையில் கணிப்பு
ADDED : ஜன 05, 2026 04:40 AM

சென்னிமலை: சென்னிமலையில் தி.மு.க., சார்பில், நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் தி.மு.க., அமைப்பு செய-லாளர் ஆஸ்.எஸ்.பாரதி பேசியதாவது: தியாகி குமரன் வாழ்ந்த இந்த மண்ணில், அவர் குடியிருந்த வீட்டுக்கு அருகில் இந்த கூட்டம் நடப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசு ஊழியர்களின் சம்பள பிரச்னை முதல், மகளிர் உரிமைத்-தொகை திட்டம் வரை அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்-பட்டு வருகிறது. 'ஸ்டாலினால் கொடுக்க முடியுமா?' என்று பழ-னிசாமி கேட்டார். ஆனால், 28 மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும், 2026 சட்டசபை தேர்-தலில் தி.மு.க., 200 இடங்களில் வெற்றி பெற்று, ஏழாவது முறை-யாக ஆட்சி அமைக்கும். ஸ்டாலினே மீண்டும் முதல்வராவார். இவ்வாறு பேசினார்.கூட்டத்தில் கட்சி துணை பொது செயலாளரும் அமைச்சருமான சாமிநாதன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,

