sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

/

இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

இறந்த சிசுவை கவ்வி சென்ற நாய் அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி


ADDED : ஜூன் 08, 2025 01:00 AM

Google News

ADDED : ஜூன் 08, 2025 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் உள்ள மோவ் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கழிப்பறை அருகே நாய் ஒன்று, பிறந்து இறந்த சிசுவை வாயில் கவ்விச் சென்றதை மருத்துவமனை காவலாளி நேற்று கண்டார்.

நாயை விரட்டிய அவர், சிசுவின் உடலை செவிலியர்களிடம் ஒப்படைத்தார்.

இது தொடர்பாக, மோவ் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை வந்த போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், 'சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

'மர்ம நபர் ஒருவருடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சிறிது நேரத்தில், கழிப்பறைக்கு சென்ற நாய், பிறந்து இறந்த நிலையில் இருந்த சிசுவின் உடலை கவ்விச் சென்றது.

'காவலாளி அதை மீட்டுள்ளார். இந்த விபரங்கள் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, தப்பிச் சென்ற சிறுமி மற்றும் அவருடன் வந்த நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது' என, தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us