sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உள்நாட்டு கண்டுபிடிப்புகளால் ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு; டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு பாராட்டு

/

உள்நாட்டு கண்டுபிடிப்புகளால் ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு; டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு பாராட்டு

உள்நாட்டு கண்டுபிடிப்புகளால் ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு; டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு பாராட்டு

உள்நாட்டு கண்டுபிடிப்புகளால் ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு; டி.ஆர்.டி.ஓ.,வுக்கு மத்திய அரசு பாராட்டு

3


ADDED : டிச 12, 2025 09:18 AM

Google News

3

ADDED : டிச 12, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளால் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத்துறை தொடர்பாக பார்லிமென்ட் நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையில்; கடந்த காலம் மற்றும் நடப்பாண்டில் அடுத்த தலைமுறைக்கான ஹைபர்சோனிக் தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுகணைகளை உருவாக்குவதில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளது.

பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறனை மேம்படுத்துவதில் டிஆர்டிஓவின் சாதனை தொடரும் என்று நம்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஆராய்ச்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தியின் மூலம், 2 லட்சத்து 64 ஆயிரத்து 156 கோடி ரூபாயை சேமித்துள்ளது.

டிஆர்டிஓவின் பல்வேறு சாதனைகளில், 2024ம் ஆண்டு நவம்பர் மாதம், நீண்டதூர ஹைபர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. அதேபோல, அக்னி பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி பல இலக்குகளை தாக்கி விட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேரும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதுபோன்ற பல சோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us