பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி
பழங்குடியின வாலிபர்களுக்கு 'ட்ரோன்' புகைப்பட பயிற்சி
ADDED : பிப் 17, 2024 05:22 AM
பழங்குடியினர் நலன்
l பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும், ஆசிரம பள்ளிகளின் பெயர், மகரிஷி வால்மீகி ஆதிவாசி புடகட்டு குடியிருப்பு பள்ளி என்று பெயர் மாற்றப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை இயங்கும் பள்ளிகளில், புதிதாக ஆறாம் வகுப்பு துவங்கப்படும். 1 முதல் 7ம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் பள்ளிகளில், புதிதாக 8ம் வகுப்பு துவங்கப்படும்.
l ஏழு மாவட்ட தலைநகரங்களில் பழங்குடியின மாணவர்களுக்காக 14 விடுதிகள் கட்டப்படும். இதில் ஏழு விடுதிகள் மாணவர்களுக்கும், ஏழு விடுதிகள் மாணவியருக்கும் ஒதுக்கப்படும்
l இந்திய அறிவியல் கழகம், சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் வகுப்புகளில், ஆறு முதல் 12 மாத வகுப்புகளில் படிக்கும் 200 இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, தலா 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்
l பழங்குடியின சமூக இளம் தலைமுறையினர் 5,000 பேருக்கு ட்ரோன் மூலம் புகைப்படம், வீடியோக்கள் எடுக்க பயிற்சி அளிக்கப்படும்.
l கோரகா, ஜெனுகுருபா, யரவா, காடுகுருபா, சோலிகா, சித்தி, மலைகுடி, ஹலசரு உட்பட 23 நாடோடிகள் சமூகத்தின் வளர்ச்சிக்காக, இரண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படும். நாடோடி மக்கள் குழந்தைகளுக்கு, ஏகலைவா மாடல் குடியிருப்பு பள்ளியில் 20 இடங்கள் ஒதுக்கப்படும். இதற்கு நுழைவுத்தேர்வு கிடையாது.