sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது

/

தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது

தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது

தொழிற்சாலை ரெய்டில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்து பறிமுதல்; குஜராத்தில் 4பேர் கைது

2


UPDATED : நவ 06, 2025 06:25 PM

ADDED : நவ 06, 2025 05:07 PM

Google News

2

UPDATED : நவ 06, 2025 06:25 PM ADDED : நவ 06, 2025 05:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமாதாபாத்: குஜராத்தில் ரகசியமாக செயல்பட்ட தொழிற்சாலையில் நடத்திய ரெய்டில், ரூ.22 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட மருந்துகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(டிஆர்ஐ) அதிகாரிகள் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.

குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் ஒரு தொழிற்சாலையில் ரகசியமாக போதை மருந்துகள் உற்பத்தி செய்வதாக புகார் எழுந்த நிலையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.22 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புலனாய்வு இயக்குநரகம் அறிக்கை:

முறையான ஆவணங்கள் அல்லது மருத்துவ உரிமம் இல்லாத எந்தவொரு செயலும் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆபரேஷன் ஒயிட் கோல்ட்ரான் என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையின் விளைவாக ரூ.22 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட மருந்துகள் (அல்பிரஸோலம்) பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நிதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களான மூளையாகச் செயல்பட்டவர்கள் மற்றும் மருந்துகளை பெற்ற ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், தயாரிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட மருந்துகள் தெலுங்கானாவிற்கு வழங்குவதற்காகவும், கள்ளில் கலக்கவும் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு புலனாய்வு இயக்குநரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us