sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

/

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு

2


ADDED : ஏப் 08, 2025 02:14 PM

Google News

ADDED : ஏப் 08, 2025 02:14 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக, இந்தியா வந்துள்ள துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம்க்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 நாட்கள் அரசு முறை பயணமாக துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் இன்று (ஏப்ரல் 8) இந்தியா வருந்தார். டில்லி விமான நிலையத்தில் அவரை மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார். டில்லி விமான நிலையத்தில் துபாய் இளவரசர் இறங்கியதும் இசை நிகழ்ச்சிகள் நடந்தது.

அவருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: துபாயின் பட்டத்து இளவரசர் வருகை இரு நாட்டு உறவுகளின் மைல்கல்.அவருக்கு விமான நிலையத்தில் சம்பிரதாய ரீதியான மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது, என்றார்.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா இடையேயான உறவு, வர்த்தகம், தொழில் உள்பட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us