sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

/

வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

வகுப்பறை சுவர்களில் சாணம் பூச்சு.. டில்லி கல்லூரி முதல்வரின் வினோத செயல்

11


ADDED : ஏப் 14, 2025 01:33 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:33 PM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி பல்கலைக்குட்பட்ட கல்லூரியின் வகுப்பறையில் மாட்டு சாணத்தை கல்லூரி முதல்வர் பூசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி பல்கலைக்குட்பட்ட லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் பிரத்யூஷ் வத்சலா, அவரே தன்னுடைய கைகளால் வகுப்பறைகளில் உள்ள சுவற்றில் மாட்டு சாணத்தை பூசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து கல்லூரி முதல்வர் பிரத்யூஷ் வத்சலா கூறியதாவது: சுவர்களில் சாணம் பூசியது, இந்திய பாரம்பரியத்தை பயன்படுத்தி வெப்ப அழுத்தத்தை கட்டுப்படுத்துவது குறித்து கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆய்வின் ஒரு பகுதியாகும். தொடர்ந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு ஒருவாரத்தில் முடிந்து விடும். அதன் பிறகு இது பற்றி விளக்கமாக கூறுகிறேன்.

ஒரு சுவற்றின் ஒரு பகுதியில் நானே சாணத்தை கைகளால் பூசினேன். இயற்கையான சாணத்தை கையில் தொடுவது எந்த தீங்கையும் கொடுக்காது. சிலர் இதுபற்றி தெரியாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us