sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கார் விபத்தில் மணமகன் உட்பட எட்டு பேர் பலி

/

கார் விபத்தில் மணமகன் உட்பட எட்டு பேர் பலி

கார் விபத்தில் மணமகன் உட்பட எட்டு பேர் பலி

கார் விபத்தில் மணமகன் உட்பட எட்டு பேர் பலி


ADDED : ஜூலை 05, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், 'பொலேரோ' கார் கல்லுாரி சுவரில் மோதியதில் மணமகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.

உ.பி.,யின் சம்பலில் உள்ள ஹர் கோவிந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த சூரஜ், 24, என்பவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. புடான் மாவட்டம் சிர்டவுல் என்ற இடத்தில் உள்ள மணமகளின் கிராமத்திற்கு, சூரஜ் உட்பட குடும்பத்தினர் 10 பேர் 'பொலேரோ' காரில் நேற்று முன்தினம் சென்றனர்.

காலை 6:30 மணிஅளவில் ஜெவனாய் கிராமம் வழியே சென்றபோது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, கல்லுாரி சுவரில் மோதி கவிழ்ந்தது.

ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மூன்று பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அவர்கள் உயர் சிகிச்சைக்காக அலிகாரில் உள்ள மருவத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதே விபத்திற்கு காரணம் என, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us