sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

/

கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

கொடூர வார்டனுக்கு மரண தண்டனை; பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்திய வழக்கில் கோர்ட் அதிரடி

3


ADDED : செப் 28, 2024 11:50 AM

Google News

ADDED : செப் 28, 2024 11:50 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இட்டாநகர்: அருணாசல பிரதேச பள்ளி ஒன்றில், 21 பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் ஷி-யோமி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதி வார்டனாக இருந்தவர் யும்கென் பாக்ரா,33. இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை விடுதியில் இருந்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் 15 பேர் 6 முதல் 15 வயதிற்குள் உட்பட்டவர்கள். இந்த பள்ளியில் நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் 21 மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளி வார்டன் யும்கென் பாக்ராவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக,சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், 'பள்ளி குழந்தைகளை ஆபாசப்படம் பார்க்க வைத்தது, போதை மருந்து கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தது வரை குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

அனைத்து விசாரணைகளும் முடிவு அடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பு அளித்தார். பள்ளி குழந்தைகளுக்கு யும்கென் பாக்ரா பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதனால் அவருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us