sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் களம்: 'சம்மட்டி அடி' கொடுத்த டாக்டர்

/

தேர்தல் களம்: 'சம்மட்டி அடி' கொடுத்த டாக்டர்

தேர்தல் களம்: 'சம்மட்டி அடி' கொடுத்த டாக்டர்

தேர்தல் களம்: 'சம்மட்டி அடி' கொடுத்த டாக்டர்


ADDED : ஜன 01, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 01, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் பெரிய ஜனநாயக திருவிழாவான, லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்தது. கர்நாடகாவில் 5 வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்தி இருப்பதால், மாநிலத்தில் 28ல் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யானது.

காங்கிரஸ் 9 இடங்களிலும், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் துணை முதல்வர் சிவகுமார் தம்பி சுரேஷ், பெங்களூரு ரூரலில் தோற்றார். பா.ஜ., வேட்பாளரான டாக்டர் மஞ்சுநாத், சுரேஷுக்கு 'சம்மட்டி அடி' கொடுத்து வெற்றி பெற்றார்.

 முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊரான மைசூரில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட மன்னர் குடும்பத்தின் யதுவீர் அபார வெற்றி பெற்றார்.

 தேவகவுடாவின் சொந்த ஊரான ஹாசனில், காங்கிரஸ் 30 ஆண்டுகளுக்கு பின், வெற்றி மாலை சூடியது.

 பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள் பிரியங்கா, சிக்கோடி தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அவரது வயது 27. இது போன்று பீதரில் வெற்றி பெற்ற வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் கன்ட்ரேயின் வயதும் 27 தான். கர்நாடகாவில் இருந்து இந்த முறை லோக்சபாவுக்கு சென்ற, இளம் எம்.பி., என்ற பெருமையை இருவரும் பெற்று உள்ளனர்.

 மாண்டியாவில் வெற்றி பெற்ற ம.ஜ.த., குமாரசாமி, பிரதமர் மோடி அமைச்சரவையில் கனரக தொழில் அமைச்சராக உள்ளார். பிரஹலாத் ஜோஷி உணவு அமைச்சராகவும்; ஷோபா மத்திய தொழிலாளர் இணை அமைச்சராகவும், சோமண்ணா ரயில்வே இணை அமைச்சராகவும் உள்ளனர்.

மூன்றையும் தட்டி துாக்கிய காங்.,

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.,க்கள் ஆன, குமாரசாமி, துக்காராம், பசவராஜ் பொம்மை ஆகியோர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததால், சென்னப்பட்டணா, சண்டூர், ஷிகாவி தொகுதிகளுக்கு, கடந்த நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பத்து நாட்கள் கழித்து 23ம் தேதி முடிவுள் வெளியானது.சண்டூரில் காங்கிரஸ் வெற்றி பெறும். மற்ற 2 தொகுதிகளிலும் பா.ஜ., - ம.ஜ.த., வெற்றி பெறும் என்று, கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் எதிர்பார்ப்புகளை மீறி 3 க்கு 3 தொகுதியிலும், காங்கிரஸ் வென்றது. சென்னப்பட்டணாவில் 16 ஆண்டுகளுக்கு பின்பும், ஷிகாவியில் 30 ஆண்டுகள் கழித்தும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி மகன் நிகில், பசவராஜ் பொம்மை மகன் பரத் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். நிகிலுக்கு இது 3வது தொடர் தோல்வியாக அமைந்தது.








      Dinamalar
      Follow us