sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி

/

தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி

தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி

தேர்தல் அறிக்கை! எதிர்க்கட்சிகளின் வழியை பின்பற்றும் பா.ஜ.,: ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை என வாக்குறுதி


ADDED : நவ 01, 2025 12:17 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி நேற்று வெளியிட்டது. எதிர்க்கட்சிகளை போல ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு முதுகலை வரை இலவச படிப்பு என, ஏராளமான வாக்குறுதிகளை ஆளும் கூட்டணி அள்ளி வீசி உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. -----

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள, 122 தொகுதிகளில் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதால் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

இதில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், லோக் ஜனசக்தி 29 தொகுதிகளில் களமிறங்குகிறது. எதிர்க்கட்சியான, 'மஹாகட்பந்தன்' கூட்டணியில், பிரதான கட்சியான முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், 143 தொகுதிகளில் போட்டியிடுகிறது; 61 தொகுதிகளில் காங்., களம் காண்கிறது.

ஆளும் தே.ஜ., கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் மகனும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நிறுத்தப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை; இலவச மின்சாரம் போன்ற கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில், மஹாகட்பந்தன் கூட்டணி அறிவித்துள்ளது. இந்நிலையில், அதே பாணியை பின்பற்றி, ஆளும் தே.ஜ., கூட்டணியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான நட்டா, முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகா உள்ளிட்டோர், 69 பக்கங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் l அரசு மற்றும் தனியார் துறை மூலம், 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு l ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் l விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 9,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் l பெண் தொழில்முனைவோருக்கு 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி l பொருளாதார ரீதியாக பின்தங்கிய பல்வேறு சமூகத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி l உலகத்தரம் வாய்ந்த 'ஸ்மார்ட் சிட்டி'யாக பாட்னா மாற்றப்படும்; சீதாதேவி பிறந்த இடத்திற்கு அருகிலுள்ள சீதாபுரத்தை ஆன்மிக பாரம்பரிய நகரமாக மாற்றுவோம் l பீஹாரில் இருந்து நேரடி சர்வதேச விமான சேவை துவங்கப்படும்; நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் l பீஹார் முழுதும் 10 புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் l ரேஷன் பொருட்கள்; 125 யூனிட் மின்சாரம் இலவசம் l குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு; 50 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் * ஏழை மாணவர்களுக்கு மழலையர் வகுப்பு முதல் முதுகலை படிப்பு வரை இலவச கல்வி * உயர்கல்வியில் பயிலும் எஸ்.சி., மாணவர்களுக்கு 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் * பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் * பீஹாரில் ஐந்து மெகா உணவு பூங்காக்கள் அமைக்கப்படும். மாநிலத்தை அனைத்து துறைகளிலும் தற்சார்பு உடையதாக மாற்றுவோம் * தெற்காசியாவின் ஜவுளி மையமாக பீஹார் மாற்றப்படும் * பீஹாரில் ராணுவ வழித்தடம், செமிகண்டக்டர் பூங்கா, உலகளாவிய திறன் மையங்கள், நிதி தொழில்நுட்ப நகரம் அமைத்து, தொழில்நுட்ப மையமாக மாற்றுவோம் * 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கல்வி நகரம் உருவாக்கப்படும். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஊக்குவிக்கப்படும் * ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்கப்படும் * விளையாட்டு துறையில் பீஹாரை முன்னணி மாநிலமாக மாற்றுவோம் * 'கிக்' எனப்படும் ஆன்லைன் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 4 லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு * உலகளாவிய ஆன்மிக மையமாக பீஹார் மாற்றப்படும் * திரைப்பட நகரம், சாரதா கலை மற்றும் கலாசார பல்கலை, பீஹார் நாடகப் பள்ளி, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அமைக்கப்படும் * வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் வகுக்கப்படும்; நதிகள் இணைக்கப்படும்








      Dinamalar
      Follow us