sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு

/

கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு

கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு

கர்நாடகாவில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 36 பைசா உயர்வு

2


ADDED : மார் 21, 2025 12:18 AM

Google News

ADDED : மார் 21, 2025 12:18 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மின் கட்டணத்தை யூனிட்டுக்கு, 36 பைசா உயர்த்தி கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 'ஷாக்' கொடுத்து உள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்; பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை உட்பட ஐந்து வாக்குறுதி திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்களுக்காக ஆண்டிற்கு 56,000 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வாக்குறுதி திட்டங்களுக்கு பணம் கொடுப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல் அரசு திணறுகிறது.

இந்நிலையில், கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், '2025 - 2026ம் ஆண்டிற்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 36 பைசா; 2026 - 2027ல் 35 பைசா; 2027 - 2028ல் 34 பைசா உயர்த்தப்படும்' என கூறியிருந்தது.

கர்நாடகாவில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இவை, மாநில மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளன. 'வாக்குறுதி திட்டங்கள் என்ற பெயரில், ஒரு கையால் கொடுத்துவிட்டு இன்னொரு கையால் பணத்தை பறிக்கின்றனர்' என்றும், மக்களிடம் இருந்து குமுறல்கள் கேட்கின்றன.

தற்போது, 1 யூனிட் மின் கட்டணம் 5 ரூபாய் 90 காசாக உள்ளது. யூனிட்டிற்கு 36 பைசா உயர்த்தப்பட்டு இருப்பதன் வாயிலாக, 6 ரூபாய் 26 பைசாவாக உயர்ந்து உள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

சம்பளம் உயர்வு?

இதற்கிடையில், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களின் மாத சம்பளத்தை உயர்த்தும் சம்பள திருத்த மசோதா, சட்ட சபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால், தற்போதைய சம்பளம், இரண்டு மடங்கு உயரும் என்று கூறப்படுகிறது.இதன்படி, 75,000 ரூபாயாக உள்ள முதல்வரின் சம்பளம் 1.50 லட்சம் ரூபாயாக உயரும். அமைச்சர்கள் சம்பளம் 60,000 ரூபாயில் இருந்து 1.25 லட்சம் ரூபாய்; எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம் 40,000 ரூபாயில் இருந்து 80,000 ரூபாயாக உயரும்.








      Dinamalar
      Follow us